Thursday, May 3, 2007

தனிமைப் பயணங்கள்

தெருவிறங்கி நடக்கையில்
இரண்டடிக்குள் என்னுடன் நீ

சற்றே தோல் உரசி
என் விரல்களுள் உன் விரல்கள்

என் காதோர
உன் இரகசியங்களுக்காக
கேட்கும் வரம் வேண்டி
என் கன்னங்கள்

கர்வமிழந்து நிற்கிறது
தனிமைப் பயணங்களில்
தான் மட்டுமே
துணையென்றிருந்த
என் நிழல்

பார்க்கும் போதெல்லாம்
ஒரு புன்னகையை
மட்டுமே விட்டுச் செல்கிறாய்
நீ அறிந்து

1 comment:

madhu said...
This comment has been removed by the author.